ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த புழு என்கிற படம் வெளியானது. நேற்று மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள டுவல்த் மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.. என்றாலும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் சிலருக்கு இது சந்தோசமான விஷயமாக அமைந்து விட்டது.
மோகன்லாலின் படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் அவரது படத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவரது படம் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விட்டதால், 5 சிறிய படங்கள் நேற்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளன.. அதேசமயம் இப்படி சிறிய படங்கள் தைரியமாக தியேட்டர்களில் வெளியாகும்போது எதற்காக மோகன்லால் ஜீத்து ஜோசப் என்கிற வெற்றிக்கூட்டணியில் உருவான டுவல்த் மேன் படத்தை ஓடிடியில் வெளியிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.