மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மிருகம் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. பிரபல தெலுங்கு இயக்குனரான ரவிராஜா பினிஷெட்டியின் மகனான இவர் தொடர்ந்து தமிழ் திரையுலகிலேயே கவனம் செலுத்தி படங்களில் நடித்து வந்தார். ஈரம் படம் இவருக்கு ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாகவராயினும் நா காக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் நடிகை நிக்கி கல்ரானியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதை உறுதி செய்வது போல இருவருக்கும் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்த நிலையில் வரும் மே 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து நடிகர் ஆதி, ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்து தனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அஜித்துடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் ஆதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தற்போது அஜித்தை அவர் சந்தித்தது தனது திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காக மட்டுமே என்று சொல்லப்படுகிறது.