Advertisement

சிறப்புச்செய்திகள்

இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்லாந்தில் பரத் படக்குழு மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்

14 மே, 2022 - 03:52 IST
எழுத்தின் அளவு:
Attack-on-Bharath-movie-shooting-by-thailand-local-people

2018ம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாத்தலமான தாம் லுங் என்ற குகைக்குள் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் போராட்டத்துக்கு இடையில் மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 'ஆக்ஷன் 22' என்ற படம் தயாராகிறது. சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில் தமிழ் நடிகர் பரத் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களின் பயிற்சியாளராக நடிக்கிறார். அவர் தவிர சபரீஷ் வர்மா, இர்ஷத், லாலு அலெக்ஸ், கலேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். லிஞ்சு எஸ்தப்பன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பை சம்பவம் நடந்த இடத்திலேயே நடத்த படக்குழு தாய்லாந்து சென்றது. அரசு அனுமதியுடன் குகைக்குள் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால் உள்ளூர் மக்கள் தங்களுக்கு பெரும் தொகை தந்தால் தான் படப்பிடிப்பை நடத்த விடுவோம் என்று தகராறு செய்தனர். அவர்கள் கேட்ட பணமும் கொடுக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட இன்னொரு தரப்பினர் தங்களுக்கும் பணம் தரவேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பு வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். என்றாலும் இனி தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இந்தியா திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்கள். என்றாலும் முழுபாதுகாப்பு தருகிறோம் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று தாய்லாந்து சுற்றுலாத்துறை, தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடிக்கு வந்த ஆர்ஆர்ஆர் : மே 20ல் வெளிவருகிறதுஓடிடிக்கு வந்த ஆர்ஆர்ஆர் : மே 20ல் ... அஜித்துக்கு நேரில் சென்று திருமண அழைப்பு விடுத்த ஆதி அஜித்துக்கு நேரில் சென்று திருமண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in