மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் நடித்த படம் ஆர்ஆர்ஆர். கடந்த மார்ச் 25ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. பாகுபலி அளவிற்கு படம் பேசப்படவில்லை என்றாலும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. வருகிற மே 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் காணலாம். இதில் முக்கிய அம்சமாக 4கே ஒளி தரத்திலும், டால்பி அட்மாஸ் ஒலி தரத்திலும் வெளியாகிறது.




