படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பார்த்தாலே பரவசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரகனி, அதன்பிறகு விஜயகாந்த் நடித்த நிறைஞ்ச மனசு படத்தை இயக்கினார். அதன்பிறகு 4 ஆண்டுகள் வரை எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். சின்னத்திரை தொடரை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியபோதும் நடிகராக முன்னணிக்கு வந்தார். இப்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணசித்ர நடிகராகிவிட்டார்.
நாடோடிகள் படத்தை தெலுங்கில் சம்போ சிவ சம்போ என்ற பெயரில் இயக்கினார். ரவிதேஜா நடித்த இந்த படம் தமிழில் பெற்ற வெற்றியை பெறவில்லை. நிமிர்ந்து நில் படத்தை ஜான்டா பாய் கப்பிராஜு என்ற பெயரில் இயக்கினார். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் படம் இயக்க இருக்கிறார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது சமுத்திரகனி கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் படத்தின் ரீமேக் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. "ரசிகர்கள் நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். நானும் பவன் கல்யாணின் ரசிகர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்" என்று கூறியிருக்கிறார் சமுத்திரகனி.