இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில் சுந்தர் பாலு தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய ஹீரோயின். அவருடன் ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகியார் நடித்துள்ளர். நேற்று நடந்த விழாவிற்கு சுபிக்ஷா மட்டுமே வந்திருந்தார். மற்ற 3 ஹீரோயின்களும் வரவில்லை. இத்தனைக்கும் ஆஷ்னா ஜவேரியும், ஐஸ்வர்யா தத்தாவும் பிசியான நடிகைகள் இல்லை.
இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது "ஒவ்வொரு நடிகையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி விழாவுக்கு வரவில்லை. வரலட்சுமி சரத்குமார் தான் ஐதராபாத்தில் குடியேறி விட்டதாகவும், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாலும் வர இயலாது என்று தெரிவித்து விட்டதாக" கூறினார்கள்.
விழாவில் நடிகை சுபிக்ஷா பேசியதாவது: கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார், என்றார்.




