நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அரசியலில் தொடர் தோல்விகளை சந்தித்த கமல்ஹாசன் தற்போது சினிமாவில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அவர் நடித்து வரும் விக்ரம் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரம் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளார்.
அந்த பாடலில் "கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கமல்ஹாசன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' என்ற பாடல் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் சாதிய ரீதியான பிரச்னைகளை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. எனவே விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும். மேலும், மத்திய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்ட கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.