மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை ஐபிஎல் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு சொந்தமான நிறுவனம் தோனி என்டர்டெயின்மெட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்று தமிழில் தயாராக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது.
அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். எனினும், எங்களது நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களுக்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது, அவற்றை விரைவில் உங்களுடன் பகிர்வோம்,” என்று அறிவித்துள்ளது.
சஞ்சய் என்பவர் ரஜினிகாந்த்திடம் பணி புரிந்தவர் என்றும், அவர் தான் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் முக்கிய பணியில் இணைந்துள்ளார் என்றும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி நிறுவனமே மறுத்துள்ளது.
அதேசமயம் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. இதனால் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.