பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கமல்ஹாசன் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 - 2700 ரூபாய்க்கு நடித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை சரிகாவை காதலித்து கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தார்கள். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தினமும் காலையில் எழுகிறோம், வேலை செய்கிறோம், தூங்குகிறோம். வாழ்க்கையை வீணடிப்பதாகவே நினைத்தேன். அதனால் ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடிவு செய்தேன். புதிதாக ஒன்றை செய்ய நினைத்தேன். திடீரென லாக்டவுன் வந்ததது. கையில் பணமில்லை. அந்த சமயத்தில் நாடகங்களில் நடித்து நாள் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.2700 வரை சம்பாதித்தேன். இது மிகவும் கவனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஒரு வருடம் ஆகும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது ஐந்து வருடங்கள் ஆனது. அந்த ஐந்து வருடங்கள் நன்றாக இருந்தன'' என தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு வெப்சீரிஸில் சரிகா நடித்து வருகிறார். இது தவிர சில படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். கமலின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




