பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு அவர்களது ஊரில் கிடைக்காத வாய்ப்புகளும், பிரபலமும் வேறு ஊரில்தான் கிடைக்கும். இங்கிருந்து தெலுங்கிற்குப் போய் பிரபலமானவர் த்ரிஷா. அவருக்கடுத்து சமந்தா, சாய் பல்லவி ஆகியோர் அங்கு மிகவும் பிரபலமானார்கள்.
தமிழில் சாய் பல்லவிக்கு சரியான வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 'தியா, மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்கள் அவருக்கு சுமாரான வெற்றிகளையே தந்தன. அவர் தமிழில் கடைசியாக நடித்த 'என்ஜிகே' படம் 2019ல் வெளிவந்தது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கில் உருவாகியுள்ள 'கார்கி' படத்திலும் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இனி, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.