டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை | 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா | உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில் | கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்… |

விஜய் நடித்த ‛புலி' படத்தை தயாரித்தவர் பி.டி. செல்வகுமார் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் பி ஆர் ஓ ஆக, விஜய் மேனேஜராக இருந்தார். புலி பிரச்னைக்கு பின் அவரிடம் இருந்து ஒதுங்கினார். இப்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து, வரும் சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட ஆசைப்படுகிறார்.
சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் நானும் இணைந்து விஜயின் பல நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி இருக்கிறோம். பக்காவாக திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் தவெக.,வில் இருப்பதால் கரூர் சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி விஜய் பற்றி நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி அல்லது வேறு கட்சி, ஏன் தவெக அழைத்தால் கூட அவருடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயார். விஜய்க்கு இப்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.