பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மே 8ம் தேதி அன்னையர் தினத்தன்று தனது அம்மாவுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்துள்ளார். அவருடைய அம்மாவுக்குப் பிடித்தமான நீல நிறத்திலேயே காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் பெற்றோருடன் இருக்கும் ராஷிகண்ணாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக இந்தப் பரிசைத் தந்துள்ளார் ராஷி கண்ணா.
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு அன்பு முத்தங்களைத் தந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “அன்னையர் தினம், இன்றும், என்றென்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.