கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மே 8ம் தேதி அன்னையர் தினத்தன்று தனது அம்மாவுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்துள்ளார். அவருடைய அம்மாவுக்குப் பிடித்தமான நீல நிறத்திலேயே காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் பெற்றோருடன் இருக்கும் ராஷிகண்ணாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக இந்தப் பரிசைத் தந்துள்ளார் ராஷி கண்ணா.
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு அன்பு முத்தங்களைத் தந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “அன்னையர் தினம், இன்றும், என்றென்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.