'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மே 8ம் தேதி அன்னையர் தினத்தன்று தனது அம்மாவுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்துள்ளார். அவருடைய அம்மாவுக்குப் பிடித்தமான நீல நிறத்திலேயே காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் பெற்றோருடன் இருக்கும் ராஷிகண்ணாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக இந்தப் பரிசைத் தந்துள்ளார் ராஷி கண்ணா.
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு அன்பு முத்தங்களைத் தந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “அன்னையர் தினம், இன்றும், என்றென்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.