மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகராக பிசியாகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ், தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் நடிகராக இருக்கிறார். என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'கில்லர்' என்ற படத்தை அவர் இயக்கி, நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பனையூரில் தனியார் ரெசார்ட் ஒன்றில் நடந்து வருகிறது.
நேற்று அங்கு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ரோப் கட்டி சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. காட்சி முடிந்தும் ரோப்பில் இருந்து இறங்கும்போது தடுமாறிய அவர் அங்கிருந்த கம்பி ஒன்றின் மீது மோதினார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 கால்களிலும் 2 தையல்கள் போடப்பட்டன. அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.