வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இயக்குனர் பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கூடுதலாக சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடி வருகிறார். அதை வெட்டி அவர் அளித்த பேட்டியில், ''சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்பொழுது மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்'' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ''சினிமாவுக்கு வர நண்பர்கள் உதவினார்கள். அப்புறம் பாரதிராஜாவிடம் சேர்ந்தேன். '16 வயதினிலே' படத்தில் என் பெயர் வந்தது. அந்த படத்தின் வெற்றி பலருக்கு மாற்றத்தை கொண்டு வந்தது. அதில் நானும் ஒருவன். சமீபத்தில் கமலிடம் பேசியபோது கூட இதை குறிப்பிட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். பின்னர் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனேன். அடுத்து ஹீரோ, இயக்குனர் ஆனேன்.
'கிழக்கே போகும் ரயில்' படத்தில் தற்செயலாக ஒரு கேரக்டரில், அதுவும் சின்ன ரோலில் நடித்தேன். அதை பார்த்த என் அம்மா நீ ஏன் ஹீரோ ஆகக்கூடாதுனு கேட்டார். அதுக்கு தனி திறமை வேணும்னு சொன்னேன். நீ ஹீரோ ஆவாய். உன் இயக்குனர் நடிக்க வைப்பார் என்றார். அவர் சொன்னது 'புதிய வார்ப்புகள்' படத்தில் நடந்தது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கு பின், என் பெயரை காப்பாற்றும் வகையில் பாக்யராஜ் வருவார் என, இயக்குனர் பாரதிராஜா சொன்னார்,'' என்று மலரும் நினைவுகளை பாக்யராஜ் சொன்னார்.




