'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது. அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை. கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.