இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது. அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை. கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.