ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே .சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால் வாலி ஹிந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே .சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதை திரைக்கதை தனக்கே சொந்தம் . அதனால் வாலி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் .ஜே. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனபோதிலும் இப்படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அவர் வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் ஹிந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.