படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே .சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால் வாலி ஹிந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே .சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதை திரைக்கதை தனக்கே சொந்தம் . அதனால் வாலி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் .ஜே. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனபோதிலும் இப்படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அவர் வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் ஹிந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.