ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே .சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால் வாலி ஹிந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே .சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதை திரைக்கதை தனக்கே சொந்தம் . அதனால் வாலி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் .ஜே. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனபோதிலும் இப்படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அவர் வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் ஹிந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.