ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர்களின் மகள்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஜீவிதாவும், ராஜசேகரும் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜீவிதாவும், ராஜசேகரும் கருட வேகா என்ற படத்தை தயாரிக்க ஆந்திராவை சேர்ந்த ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 26 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்த அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வர ராஜூ, நிர்வாக இயக்குனர் ஹேமா ஆகியோர் ஜீவிதா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஜீவிதா கூறியிருப்பதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கே மோசடியானது. என் மீது எந்த தவறும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை சட்டப்படி சந்திப்பேன். என்று கூறியிருக்கிறார்.