கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என பெயரைப் பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'கேஜிஎப் 2' படம் குறித்த பல பேட்டிகளை அவர் கொடுத்துள்ளார். அதில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி கதை எழுதுகிறீர்கள் என்ற ஒரு கேள்விக்கு, “குடித்த பின்தான் கதைகளை எழுதுவேன். மறுநாள் நான் நிதானமாக இருக்கும் போது முன்தினம் போதையில் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். அப்போது அவை எனக்கு சிறந்ததாகத் தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதையை எழுதுவேன்,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பொதுவாகவே திரையுலகத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பேச்சு உண்டு. இந்தக் காலத்தில் அனைவருமே அவர்களது பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பேசிவிடுகிறார்கள். பிரசாந்த் நீல் இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது. இதனால், வளரத் துடிக்கும் பலரும் குடித்தால் நன்றாக கதை எழுதலாம் என அந்த முயற்சியில் இறங்கும் ஆபத்தும் இருக்கிறது.