Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடித்துவிட்டு கதை எழுதுவேன் - 'கேஜிஎப்' இயக்குனர் அதிர்ச்சித் தகவல்

17 ஏப், 2022 - 11:39 IST
எழுத்தின் அளவு:
I-wroter-story-while-drinking-says-Prasanth-neel

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என பெயரைப் பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல்.

'கேஜிஎப் 2' படம் குறித்த பல பேட்டிகளை அவர் கொடுத்துள்ளார். அதில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி கதை எழுதுகிறீர்கள் என்ற ஒரு கேள்விக்கு, “குடித்த பின்தான் கதைகளை எழுதுவேன். மறுநாள் நான் நிதானமாக இருக்கும் போது முன்தினம் போதையில் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். அப்போது அவை எனக்கு சிறந்ததாகத் தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதையை எழுதுவேன்,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

பொதுவாகவே திரையுலகத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பேச்சு உண்டு. இந்தக் காலத்தில் அனைவருமே அவர்களது பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பேசிவிடுகிறார்கள். பிரசாந்த் நீல் இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது. இதனால், வளரத் துடிக்கும் பலரும் குடித்தால் நன்றாக கதை எழுதலாம் என அந்த முயற்சியில் இறங்கும் ஆபத்தும் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'பீஸ்ட், கேஜிஎப் 2' படங்களைப் பார்த்தாரா ரஜினிகாந்த் ?'பீஸ்ட், கேஜிஎப் 2' படங்களைப் ... 500 கோடி வசூலைக் கடக்கும் 'கேஜிஎப் 2' 500 கோடி வசூலைக் கடக்கும் 'கேஜிஎப் 2'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18 ஏப், 2022 - 08:33 Report Abuse
Matt P கண்ணதாசனும் குடித்து விட்டு தான் கவிதை எழுதுவாராம். இன்னொருத்தர் கஞ்சா அடிச்சிட்டு தான் கவிதை எழுதினாராம். சட்டத்துக்கு மாறா எதுவும் செய்யாமல் இருந்தா சரி தான்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17 ஏப், 2022 - 18:07 Report Abuse
sankar அரசாங்கம் சரக்கு விக்கிறது தான் அதிர்ச்சியா இருக்கனும். ஒரு பெங்களூர்வாசி தண்ணி அடிப்பது சாத்திரம்
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17 ஏப், 2022 - 17:42 Report Abuse
mindum vasantham vijay sethupathi vakayaraa
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
17 ஏப், 2022 - 14:56 Report Abuse
Vena Suna பொறுப்பற்ற பேச்சு, இளைஞர்களுக்கு சினிமாக்காரனுங்க குடியையும் காமத்தையும் தான் கற்று கொடுக்கிறார்கள். இவர்கள் பூமிக்கு பெரிய பாரம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17 ஏப், 2022 - 21:12Report Abuse
Sanny கண்ணதாசனே குடித்துவிட்டு தான் பாட்டே எழுதுவார். நானும் அப்படிதான், எனக்கு தந்த கேஸை மீள்ஆய்வு செய்ய இரவில குடித்துவிட்டுதான் பார்த்து குறிப்பு எழுதுவேன், காலையில் சரிபார்த்துக்கொள்வேன். 90% Success ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in