இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'கேஜிஎப் 2'. எதிர்பார்ப்புகளுக்கும் மீறி இப்படம் அதிக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து, இந்திய அளவில் 240 கோடி வசூலைக் கடந்தது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்கெனவே முன்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு நாளில் இப்படம் மீண்டும் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், முதல் வார இறுதி வசூலாக இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 70 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 65 கோடி, தமிழகத்தில் 25 கோடி, கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் வார இறுதி வசூலை 'கேஜிஎப் 2' படம் நிச்சயம் முறிடித்துவிடும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.




