ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'கேஜிஎப் 2'. எதிர்பார்ப்புகளுக்கும் மீறி இப்படம் அதிக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து, இந்திய அளவில் 240 கோடி வசூலைக் கடந்தது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்கெனவே முன்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு நாளில் இப்படம் மீண்டும் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், முதல் வார இறுதி வசூலாக இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 70 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 65 கோடி, தமிழகத்தில் 25 கோடி, கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் வார இறுதி வசூலை 'கேஜிஎப் 2' படம் நிச்சயம் முறிடித்துவிடும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.




