சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழ்த் திரையுலகத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி பிரபுதேவா, வடிவேலு நடித்த 'மனதைத் திருடி விட்டாய்' படத்தில் உள்ளது. அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் கூட்டணி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியது.
படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அப்போதெல்லாம் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, 'சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்' என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, வடிவேலு ஆரம்பக் காலத்திலிருந்தே சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த 'சிங் இன் த ரெயின்' பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். 'நட்பு' என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.