வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஜீ5 ஓடிடி தளம் 10 புதிய வெப் சீரிஸ்களை வெளியிட இருக்கிறது. பிரகாஷ்ராஜ் நடிப்பில். வி.பிரியா இயக்கத்தில் 'அனந்தம்', வசந்தபாலனின் இயக்கத்தில் 'தலைமைச் செயலகம்', ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் 'பைவ், சிக்ஸ், செவன், எயிட்', கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்', அமீர் நடிப்பில் வெற்றிமாறன் எழுதி, ரமேஷ் இயக்கியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்' உள்பட 10 தொடர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இந்த 10 தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது வெற்றிமாறன் கதையில் அமீர் நடிக்கும் நிலமெல்லாம் ரத்தம். இதனை ரமேஷ் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து வெற்றி மாறன் கூறியிருப்பதாவது: வெப் சீரிஸ் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நினைத்தை நிறைய எழுதுவதற்க்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமாவுக்கு 200 பக்கத்துக்கு மேல் எழுத முடியாது. ஆனால் வெப் சீரிசில் அதையும் தாண்டி எழுதிக்கொண்டே போகலாம். சினிமாவில் இருக்கும் கட்டுப்பாட்டை கடந்து வெப் தொடரில் நிறைய விஷயங்களை பேசலாம் என்கிறார் வெற்றி மாறன்.