நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பான்-இந்தியா படங்கள் என்ற மிகப் பெரிய வட்டத்திற்குள் தெலுங்கு ஹீரோக்கள் சிலரும், கன்னடத்திலிருந்து ஒருவரும் சென்று விட்டார்கள். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், கன்னடத்திலிருந்து யஷ் ஆகியோர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ள தென்னிந்திய ஹீரோக்களாக முன்னிலை வகிக்கிறார்கள்.
ஆனால், தமிழில் தங்களது படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட ஆசைப்படும் ஹீரோக்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள். அஜித் அவர் நடிக்கும் தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களுக்கே வர மாட்டார். அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். விஜய் தமிழில் மட்டும் அவரது பட விழாக்களில், அதுவும் இசை வெளியீட்டில் மட்டுமே கலந்து கொள்வார்.
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக இசை வெளியீட்டு விழாவையும் நடத்தவில்லை. ஆனால், ஒரே ஒரு டிவி பேட்டி மட்டுமே தந்துள்ளார் விஜய்.
'பீஸ்ட்' படத்துடன் போட்டி போட்டு முன்பதிவில் முந்திக் கொண்டிருக்கும் படமாக கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள யஷ் பிரமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். டில்லி, மும்பை, சென்னை, கொச்சி என சென்றுவிட்டார். அடுத்து இன்னும் சில ஊர்களுக்கு செல்லவிருக்கிறார்.
யஷ் இப்படி சுற்றிக் கொண்டிருக்க 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லையே ஏன் மற்ற மொழிகளில் உள்ள ஊடகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். பான்-இந்தியா படமாக வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கேற்றபடி இந்தியா முழுவதும் சுற்றி தங்களது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.