இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க டந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 25 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதே சமயம், ஹிந்தியில் நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடந்த மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்பிப் போய் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் பேசி வருகின்றனராம். ஹிந்தி ரசிகர்களையும் கவரும் விதத்தில் கூடுதலாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனிடையே, இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் கூடுதலாக சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இயக்குனருக்கு 50 கோடி வரை சம்பளம், அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தி உரிமை என பேசி முடித்துள்ளார்களாம். இது அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கும் இரு மடங்கு சம்பளம் என்று சொல்லிவிட்டார்களாம்.