படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க டந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 25 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதே சமயம், ஹிந்தியில் நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடந்த மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்பிப் போய் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் பேசி வருகின்றனராம். ஹிந்தி ரசிகர்களையும் கவரும் விதத்தில் கூடுதலாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனிடையே, இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் கூடுதலாக சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இயக்குனருக்கு 50 கோடி வரை சம்பளம், அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தி உரிமை என பேசி முடித்துள்ளார்களாம். இது அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கும் இரு மடங்கு சம்பளம் என்று சொல்லிவிட்டார்களாம்.