நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க டந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 25 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதே சமயம், ஹிந்தியில் நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடந்த மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்பிப் போய் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் பேசி வருகின்றனராம். ஹிந்தி ரசிகர்களையும் கவரும் விதத்தில் கூடுதலாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனிடையே, இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் கூடுதலாக சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இயக்குனருக்கு 50 கோடி வரை சம்பளம், அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தி உரிமை என பேசி முடித்துள்ளார்களாம். இது அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கும் இரு மடங்கு சம்பளம் என்று சொல்லிவிட்டார்களாம்.