அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான வீஜே தீபிகா, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சரவண விக்ரம் - தீபிகா ஆகிய இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக செட் ஆனதால், இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தீபிகாவுக்கு முகப்பரு பிரச்னை இருந்ததால் அவர் பாதியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு சீரியல்களில் தீபிகாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை சரியாகி விடவே குறும்படங்கள், போட்டோஷூட் என பிசியாக இருந்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சித்திரம் பேசுதடி' சீரியலில் வீஜே தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் கம்பேக் தரவுள்ளார். தீபிகாவின் என்ட்ரியால் கதையில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெகடிவ் ஷேடில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்த தீபிகா தற்போது வில்லியாகவே என்ட்ரி கொடுப்பதால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த தொடரில் வீஜே தீபிகா நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சித்திரம் பேசுதடி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.