பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் |
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி, தனது தோழியை பறிக்கொடுத்தவர். காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பழையபடி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திருமணம் பற்றி ரசிகர்கள் அடிக்கடி கேள்வி கேட்டு வந்தனர். திடீரென தான் திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‛‛நான் திருமணம் செய்ய இருக்கிறேன். என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம். ஆனாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என்கிறார் யாஷிகா.