புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் ஜீ தமிழின் சத்யா-2 தொடரிலும் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு விஜய் சமீபத்தில் கூறிய போது, 'தொலைக்காட்சியில் வெவ்வேறு வேடங்களில் நடிப்பது பெருமையாக இருக்கிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'இது சொல்ல மறந்த கதையில், என்னுடைய கதாபாத்திரம் அர்ஜூன். இந்த தொடரில் முக்கியமானதே எனக்கும் மகளுக்குமான உறவு தான். அர்ஜூன் - அக்ஷரா உறவு என்பது தெறி படத்தை நினைவூட்டுவது போல இருக்கும். தெறி படத்தில் விஜய் மற்றும் நைனிகா பேபி போல இதில் அர்ஜூனும் அக்ஷராவும் பேசப்படுவார்கள்' என கூறியுள்ளார்.