இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்படுமா என்று தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மங்காத்தா-2 படத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் எப்போது அழைத்தாலும் உடனடியாக அந்த படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பிறகு வலிமை வரை அஜித்குமார் சென்டிமென்ட் கதைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் மங்காத்தா- 2 அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாகி இருக்கிறது. அவரது அழைப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.