கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் உள்ளம் உருகுதய்யா பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழ் கடவுளின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த பாடலை இயக்கிய பாண்டிராஜ் நடித்த சூர்யா, எழுதிய யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.