தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் உள்ளம் உருகுதய்யா பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழ் கடவுளின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த பாடலை இயக்கிய பாண்டிராஜ் நடித்த சூர்யா, எழுதிய யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.