சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வச்சாச்சாம். இதனை விஷ்ணுவர்தனே உறுதிபடுத்தியுள்ளார். பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒருபடம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்-நயன்தாராவுடன், ஆர்யா-டாப்சியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பட தலைப்பு பிரச்னை பெரும் பிரச்னையாக இருப்பதால் தங்களது படத்திற்கு எந்தவிதமான தலைப்பு பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார் விஷ்ணுவர்தன். அதனால் பல்வேறு தலைப்புகளை யோசித்து இப்போது, ஒருவழியாக படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார்.
இதுகுறித்து டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, படத்தின் தலைப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போது ஒரு தலைப்பு வைத்துவிட்டோம். அது என்ன தலைப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒருவிழா எடுத்து அறிவிக்க போவதாக கூறப்படுகிறது.