'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இதன் கதையை வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.
இதில் அமீர் பேசியதாவது: பாரதிராஜா நிறைய கதைகளை வெளியில் வாங்கி படம் இயக்குவார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.
நானும் வெற்றிமாறனும் தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அவரிடம் இருந்த இறைவன் மிகப்பெரியவன் கதையை நான் இயக்கட்டுமா என்று கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார். அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக படம் இயக்க வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், அல்லது தான் சார்ந்திருக்கும் கட்சி அடையாளங்களை முன் நிறுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காக இந்த படத்தை இயக்க வேண்டும் என தோன்றியது.
மக்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். ஓட்டுக்காக மக்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும். என்றார்.