பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு வெடி, வேட்டை என சில படங்களில் நடித்தவர், பின்னர் மும்பையை சேர்ந்த அக்ஷய் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் கூட சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டு வருகிறார் சமீரா ரெட்டி. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமியார் குறித்து மிகவும் சிலாகித்து பல தகவல்களை கூறியுள்ளார் சமீரா.
மாமியார் பற்றி அவர் கூறும்போது, “எங்களது காதலுக்கு திருமணத்திற்கு ரொம்பவே பக்கபலமாக இருந்தவர் எனது மாமியார். எங்களது திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே எங்களுடன் சினிமாவிற்கு வருவது, ஷாப்பிங் வருவது என எல்லாவற்றிலும் இணைந்து கொள்வார். அது மட்டுமல்ல திருமணத்திற்கு முன்பே அவரது வீட்டில் பல நாட்கள் நான் தங்கி இருக்கிறேன். அந்த அளவிற்கு பெருந்தன்மையான அவர், கொஞ்சம் மாடர்ன் கொஞ்சம் கலாச்சாரம் என கலந்த ஒரு கலவையான பெண்மணி” என்று கூறியுள்ளார்.