ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு சினிமாவுக்கான பட்ஜெட்டில் தமிழில் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளனர். ஜி.மில்லினம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் நீங்காத நினைவுகள் என்ற தலைப்பில் 8 பாடல்களை கொண்ட இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளனர். கொடைக்கானல், பாண்டிச்சேரி, மகாபலிபுரம், ஆகிய இடங்களிலும் ஏவிஎம் ஸ்டூடியோவில் செட்டு போட்டும் பாடல்களை படமாக்கி உள்ளனர். கார்த்தி, சின்மயி, ஹரிச்சரன், ஹரீஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, பென்னிதயாள், விஜய் யேசுதாஸ், கல்யாணி, ஆகிய முன்னணி பாடகர்கள் பாடி உள்ளனர். ஆர்.கிரீஷ் கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். கே.சி. ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கருணாகர பல்லவா இயக்கி உள்ளாளர்.
"இசை ஆல்பங்கள் வெளிநாட்டில் புகழ் பெற்றவை. தற்போது இந்தியில் இசை ஆல்பங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழில் அவ்வப்போது சில முயற்சிகள் நடந்தது. ஆனால் அது பெரிய வெற்றி பெறவில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் ஒரு சினிமாவுக்கான பட்ஜெட்டில் இதனை உருவாக்கி உள்ளோம். இதன் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.