'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கானா பாலா. ஆடி போனா ஆவணி என்ற ஒரு பாடல் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பிறகு பீட்சா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ச்சியாக 100 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடி உள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியும் உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கு பாடவோ, நடிக்கவோ பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனது வழக்கிறஞர் தொழிலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் வசிக்கும் புளியந்தோப்பு பகுதியின் 72வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.