'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் பாயிசுக்கு பல நடிகர், நடிகைளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை அக்ஷரா ரெட்டிக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.
இதை தொடர்ந்து நேற்று கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்ஷரா ரெட்டி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் மற்றும் பயசுடன் உள்ள தொடர்பு பற்றி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
நடிகை அக்ஷரா ரெட்டி, மிஸ்.ஆந்திர பிதேரசம் அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். விஜய் டி.வி நடத்திய வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். பில்கேட்ஸ் என்ற கன்னட படத்திலும், தாதி என்ற தெலுங்கு படத்திலும், காசு மேல காசு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.