ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா உலகத்தினருக்கு ஏதாவது ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்று விட்டால் போதும், உடனே அதை படமாக்கி காசு பண்ணத் தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவத்தையும் தற்போது படமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்தியில் தயாராக உள்ள அப்படத்தை இந்தியா முழுக்க மொழி மாற்றம் செய்தும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்த செய்தி வெளியானதில் இருந்து அந்த கற்பழிக்கப்பட்ட மாணவியின் வேடத்தில் நடிக்க பல நடிகைகள் நான் நீயென்று போட்டி போட்டு வருகின்றனர். அதில் லட்சுமிராய் குறிப்பிடத்தக்கவர். மற்ற நடிகைகளெல்லாம் வாய்பேச்சில் சொல்லிக்கொண்டிருக்க இவரோ, அந்த கதையை படமாக்கவிருக்கும் பட நிறுவனத்தையே மும்பை சென்று மீட் பண்ணி விட்டு வந்திருக்கிறார். அதோடு, இப்படியொரு வேடத்தில் நடிப்பது என்னை பரபரப்ப்பான நடிகையாக காட்டிக்கொள்ளவதற்காக அல்ல. பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் லட்சுமிராய், இந்த படத்தில் தனக்கு சான்ஸ் கிடைத்தால் அதற்கு சன்மானமாக ஒரு பைசாகூட தர வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம்.