ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மற்ற எந்த ஹீரோக்களின் ரசிகர்களை விட அஜித்தின் ரசிகர்கள் தான் அவரது பட அப்டேட்டுக்களை கேட்டுக்கேட்டு வாங்க கூடியவர்கள்.. அப்படி படம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அப்டேட் வந்தால் அதை வைத்து ஒரு மாதம் சோஷியல் மீடியாவை உண்டு இல்லை என பண்ணி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வலிமை படம் குறித்து அந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், “வலிமை முதல் பாதி முழுவதும் புலன் விசாரணையாக இருக்கும். இடைவேளைக்குப்பின் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட்டாக இருக்கும்” என சமீபத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.
அப்டேட்டே கொடுக்காத மனிதர்கள் மத்தியில், பரவாயில்லையே.. படத்தின் கதை நகரும் விதத்தையே இவர் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் அவரை பாராட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த தகவல் திலீப் சுப்பராயன் கவனத்துக்கு சென்றதும் மனிதர் பதறிப்போய் விட்டார். காரணம் அது அவரது ஒரிஜினல் சமூகவலைதள கணக்கு அல்ல..
இதை தெரியப்படுத்தியுள்ள திலீப் சுப்பராயன், அந்த நபரின் கணக்கு குறித்து புகார் அளியுங்கள். அந்த கணக்கை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.