'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மற்ற எந்த ஹீரோக்களின் ரசிகர்களை விட அஜித்தின் ரசிகர்கள் தான் அவரது பட அப்டேட்டுக்களை கேட்டுக்கேட்டு வாங்க கூடியவர்கள்.. அப்படி படம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அப்டேட் வந்தால் அதை வைத்து ஒரு மாதம் சோஷியல் மீடியாவை உண்டு இல்லை என பண்ணி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வலிமை படம் குறித்து அந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், “வலிமை முதல் பாதி முழுவதும் புலன் விசாரணையாக இருக்கும். இடைவேளைக்குப்பின் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட்டாக இருக்கும்” என சமீபத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.
அப்டேட்டே கொடுக்காத மனிதர்கள் மத்தியில், பரவாயில்லையே.. படத்தின் கதை நகரும் விதத்தையே இவர் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் அவரை பாராட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த தகவல் திலீப் சுப்பராயன் கவனத்துக்கு சென்றதும் மனிதர் பதறிப்போய் விட்டார். காரணம் அது அவரது ஒரிஜினல் சமூகவலைதள கணக்கு அல்ல..
இதை தெரியப்படுத்தியுள்ள திலீப் சுப்பராயன், அந்த நபரின் கணக்கு குறித்து புகார் அளியுங்கள். அந்த கணக்கை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.