நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

ஜீவா நடித்த சீறு படத்தின் மூலம் அறிமுகமானவர் ரியா சுமன். தற்போது அவர் சந்தானம் ஜோடியாக ஏஜெணட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என்ன மாதிரியான படம் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதை போட்டு உடைத்தார் ரியா சுமன். நடித்து முடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம், நடிக்க உள்ள மன்மத லீலை குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான இந்த இரண்டு படங்களிலும் ஒரு பகுதியாக இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா என்னை அணுகியபோது, கதையை கூறிவிட்டு தெலுங்கு படத்தை பார்க்க சொன்னார்.
அதை பார்க்க நான் விரும்பவில்லை ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை. படப்பிடிப்பை முடித்த பிறகு, அசல் பதிப்பை பார்த்த போது, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும், நான் நடித்த கதாபாத்திரத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தமிழுக்காக அந்த பாத்திரம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்து நடிக்கும் மன்மத லீலை கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்கால கதையில் நான் நடிக்கிறேன். இதற்குமேல் படம் பற்றியும், எனது கேரக்டர் பற்றியும் விரிவாக கூற இயலாது. என்றார்.




