மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கிய படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். மணிகண்டன, லியோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். போலீஸ் லாக்அப்பில் அடித்து கொல்லப்பட்ட இருளர் பழங்குடியின இன இளைஞரின் கதை. இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இந்த படம் பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.