கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
'சென்னை 28' படம் மூலம் சிம்பிளான, யதார்த்தமான, ஜாலியான ஒரு சென்னைப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாநாடு' படமும் வித்தியாசமான படமாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது.
வெங்கட் பிரபு தற்போது 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கி முடிக்க உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஒன்று யு டியூபில் நேற்று வெளியானது. அதில் படத்தின் நாயகன் அசோக் செல்வன், நாயகிகளில் ஒருவரான ரியா சுமன் இருவரும் நடித்துள்ள முத்தக் காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள முன்னோட்ட வீடியோக்களில் இப்படி ஒரு வீடியோ வந்திருக்க வாய்ப்பேயில்லை.
முன்னோட்டத்திற்கு முன்பு வேகமாக நகரும் சில காட்சிகளில் பெண்களின் மார்புப் பகுதிகள் க்ளோசப் காட்சிளாக இடம் பெற்றுள்ளன. யு டியூபிற்கு சென்சார் இல்லை என்பதால் இப்படியான காட்சிகள் இடம் பெறுகிறது. இதனால்தான் பலரும் யு டியுப் வீடியோக்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.
வித்தியாசமான படங்களை எடுத்து வந்த வெங்கட் பிரபு இப்படி ஒரு ஆபாச முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளாரே என்று திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த டீசரை ரசித்து 'வேற லெவல்' என கமெண்ட் செய்து கொண்டாடி வருகிறது இளைய தலைமுறை. அதில் இடம் பெற்றுள்ள கமெண்ட்டுகளைப் பார்த்தால் இந்த முன்னோட்ட வீடியோவையே தடை செய்துவிடலாம் என்று கூடத் தோன்றும்.
படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்க இது போன்ற சர்ச்சைகள் அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.