பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது செல்வராகவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேப்போன்று மலையாளம், மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திடீரென்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா என்னை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.




