அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது செல்வராகவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேப்போன்று மலையாளம், மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திடீரென்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா என்னை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.