புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது செல்வராகவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேப்போன்று மலையாளம், மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திடீரென்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா என்னை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.