பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பழம்பெரும் நடிகை ரத்னா. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவர் மாம்பழம் வேண்டும் என்றார். என்ற பாடலின் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் அதற்கு முன்பே 1964ம் ஆண்டு வெளியான தொழிலாளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாம் மூவர், சபாஷ் தம்பி, அன்று கண்ட முகம், இதயக்கனி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.