நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பழம்பெரும் நடிகை ரத்னா. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவர் மாம்பழம் வேண்டும் என்றார். என்ற பாடலின் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் அதற்கு முன்பே 1964ம் ஆண்டு வெளியான தொழிலாளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாம் மூவர், சபாஷ் தம்பி, அன்று கண்ட முகம், இதயக்கனி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.