கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை, ராங்கி' ஆகிய படங்களும் வெளிவர வேண்டும்.
இந்நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த்ரிஷா கொரானோவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து கடந்த வாரம் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் முதல் வெப் தொடரான 'பிருந்தா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நாய்களுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டது பற்றி பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா, ஆகியோர் வரிசையில் த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இதில் அவர் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியவுடனே பலரும் நடிக்க வந்துவிடுகிறார்கள்.