என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்து கடந்தாண்டு வெளியான படம் ‛ஜெய்பீம்'. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றதில் 'ஷாஷங் ரிடெம்ப்ஷன்' திரைப்படத்தை முந்தி 'ஜெய்பீம்' சாதனை படைத்தது. அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் 'ஜெய் பீம்' இடம்பெற்றது.
சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யு-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் 'ஜெய் பீம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இடம்பெற்றிருந்தது.