ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
கடந்த 2020ல் இவ்வுலகை விட்டு பிரிந்துசென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகம் மட்டும் மட்டுமல்லாமல், மொழி தாண்டி அனைத்து இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுரேஷ்கோபி, இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இளையநிலா பொழிகிறதே என்கிற பாடலை பாடி மணமக்களையும் அங்கு வந்திருந்தவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் இன்னிசை கச்சேரியை நடத்திய வயலினிஸ்ட் சபரீஷ் பிரபாகர் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி இந்த பாடலில் சில வரிகளை மட்டும் பாடினாலும், அவர் எஸ்பிபி பாடலை பாடினர் என்பதாலேயே அந்த அரங்கம் முழுதும் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனதாக கூறியுள்ளார் சபரீஷ் பிரபாகர். நடிகர் சுரேஷ்கோபி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.