‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தடுத்து யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் எலிமினேட் ஆகமாலேயே முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட சிபி வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பணப்பெட்டி டாஸ்க்கை சரத்குமார் தொடங்கி வைத்தார். 3 லட்ச ரூபாயில் ஆரம்பமான இந்த டாஸ்க் படிப்படியாக ஏலத்தில் உயர்வது போல் உயர்ந்தது. ஒருகட்டத்தில் போட்டியாளர்களே இவ்வளவு தொகை வந்தால் வெளியேறிவிடுவேன் என வாய்விட்டு சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 12 லட்ச ரூபாய் தொகை எட்டியபோது சிபி அதை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
கோல்டன் டிக்கெட் டாஸ்க்கில் அமீருடன் கடைசி வரை டப் கொடுத்தவர் என்பதால் சிபி கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறியது சிபியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.