‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தன் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் தகவல் பரவியது. இதனை கடுமையாக மறுத்துள்ள ரகுல் கோபத்துடன் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற முட்டாளத்தனமான வதந்திகளை நான் பெரிது படுத்துவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்ததரவு செய்யாதீர்கள். நான் இப்போது 10 படங்களில் நடிக்கிறேன் என் முழு கவனமும் என் தொழில் மீது இருக்கிறது.
நான் வெளிப்படைத் தன்மையானவள். ஜாக்கி பாக்னியுடனான என் காதலை பகிரங்கமாக அறிவித்ததை போன்று எனது திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் எனக்கு இருக்கிறது. எதையும், யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து எனது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். என்று கூறியிருக்கிறார்.