கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'மாநாடு'. வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தை ஒரே நாளில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். தெலுங்கில் 'தி லூப்' என்று பெயரும் வைத்து போஸ்டர்களையும் வெளியிட்டார்கள். ஆனால், சில பல காரணங்களால் தெலுங்கில் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இதனிடையே, 'மாநாடு' படம் கடந்த மாதம் டிசம்பர் 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழில் மட்டும் தான் ஓடிடியில் வெளியானது என்று பார்த்தால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் பின்னர் சேர்த்திருக்கிறார்கள். இப்படி நான்கு மொழிகளில் படம் வெளியாகியிருப்பது பரபரப்பாக பேசப்படவே இல்லை. இப்போது தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரும் ஓடிடி தளத்தில் அவரவர் மொழிகளில் படத்தை ரசிக்கலாம். நான்கு மொழிகளிலும் 'மாநாடு' என்றே படத்தின் தலைப்பு இருக்கிறது.
அப்படியென்றால் தெலுங்கில் 'தி லூப்' என்ற பெயரில் படத்தை வெளியிடுவதாகச் சொன்னது நின்று போனதாகத்தான் அர்த்தம். மேலும், படத்தின் ரீமேக்கையும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். தெலுங்கில் ஓடிடியில் வெளிவந்து விட்ட பிறகு வேறு ஒரு நடிகரை வைத்து அதே படத்தை எப்படி தெலுங்கில் நேரடியாகத் தயாரித்து வெளியிட முடியும். அப்படியே தயாரித்து வெளியிட்டாலும் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் மீண்டும் படம் பார்க்க வருவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
'மாநாடு' படம் பற்றிய தகவல்கள், படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏதோ ஒரு குழப்பத்துடனேயே இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.