இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன்பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இவர் ரஜினி உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இது அல்லாமல் சில தெலுங்கு நடிகர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகராத நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவிருந்தார் என கூறப்பட்டது. தற்போது இப்படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி, சிபி சக்கரவர்த்தி அடுத்து நானி படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளதால் அந்த படத்தை இயக்கிய பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைவார் என கூறப்படுகிறது.