நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் |

டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன்பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இவர் ரஜினி உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இது அல்லாமல் சில தெலுங்கு நடிகர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகராத நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவிருந்தார் என கூறப்பட்டது. தற்போது இப்படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி, சிபி சக்கரவர்த்தி அடுத்து நானி படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளதால் அந்த படத்தை இயக்கிய பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைவார் என கூறப்படுகிறது.