பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் வெளிவந்த 'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்டாவா' பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கோவாவிற்குச் சென்று தன்னுடைய விடுமுறையைக் கழித்து வருகிறார். பிகினி ஆடையில் முகம் நிறைய சிரிப்புடன் 'நீ அழகு கோவா' என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவிற்கு மட்டுமே 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
கணவர் நாகசைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகு இப்போதுதான் வெளியில் சுற்றுலா கிளம்பியுள்ளார். கடந்த வாரத்தில் கேரளா சென்றவர், அப்படியே கோவா சென்றிருக்கிறார்.
சமந்தா நடித்து அடுத்து தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும், தெலுங்கில் 'சாகுந்தலம்' படமும் வெளிவர உள்ளது. தற்போது 'யசோதா' என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.