ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் வெளிவந்த 'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்டாவா' பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கோவாவிற்குச் சென்று தன்னுடைய விடுமுறையைக் கழித்து வருகிறார். பிகினி ஆடையில் முகம் நிறைய சிரிப்புடன் 'நீ அழகு கோவா' என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவிற்கு மட்டுமே 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
கணவர் நாகசைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகு இப்போதுதான் வெளியில் சுற்றுலா கிளம்பியுள்ளார். கடந்த வாரத்தில் கேரளா சென்றவர், அப்படியே கோவா சென்றிருக்கிறார்.
சமந்தா நடித்து அடுத்து தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும், தெலுங்கில் 'சாகுந்தலம்' படமும் வெளிவர உள்ளது. தற்போது 'யசோதா' என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.