பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
தமிழ் திரையுலகின் நவீன கவர்ச்சி கன்னியாக வலம் வந்த யாஷிகா, விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமானார். அவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் யாஷிகா உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயமாக போயிற்று. பல நாட்கள் சிகிச்சையில் இருந்து நடக்கவே மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மனம் வருத்தமடைந்து சோக கீதங்களை பாடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க்கில் நிரூப் நந்தக்குமாரை பார்ப்பதற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகா வந்திருந்தார். அந்த சம்பவம் நிரூப்பிற்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவர் தனது கம்பேக்கை தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஹாட்டான போட்டோஷூட்களில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து, தங்கள் தலைவி ரிட்டன் வந்துவிட்டதாக யாஷிகாவின் வருகையை ரசிகர்கள் செலிபிரேட் செய்து வருகின்றனர்.